எங்கள் வலி!

எங்கள் வலி!


ஒரு இனம் அழிக்கப்படுகிறது
ஒரேயடியாய்!
கருவுற்றா குழந்தைகளும்
கலைக்கப்படுகிறார்கள்!


ஒன்றும் தராமல் ஒருபக்கம்
பட்டினியாய் வைத்து விட்டு
எல்லாம் தந்து விட்டதாய்
நாடகம் ஆடப்படுகிறது!


பட்டினியால் உயிர் விட்டோர்
எத்தனையோ பேர்!
சித்ரவதையால் உயிர் விட்டோர்
எத்தனையோ பேர்!


தமிழ்மண் முழுவதும் சிங்கள மயமாகிறது!
பல்கலை கழகங்கள் சிங்கள மயமாகிறது!
தமிழ்பெண்ணின் கற்பு அமங்கல மாகிறது!
பல்வகை சித்ரவதைகள் எங்கள தாகிறது!


உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க வீடும் வாழ இடமும்
வேண்டுவது எங்கள் உரிமை!


தன்னை உயர்ந்தவர் என்றெண்ணி
தரணியின் எதிர்ப்பையும் விஞ்சி
எம்மை அடிமை படுத்தியது
கொடுமையிலும் கொடுமை!


சமமாய் எங்களை மதியாதவரிடம்
எங்கள் உரிமைக்காக போராடியதில்
என்ன தப்பு உள்ளது?


எங்கள் உரிமைக்காக போராடியதில்
பண்புமிகு பாரத தேசமும்
வம்புமிகு சீன தேசமும் கைகோர்த்து
சிங்களரோடு எம்மை எதிர்த்த போதும்
எங்களவர்கள் யாரும் பயந்ததில்லை!
களத்தை விட்டு ஓடவில்லை!
கடைசி மூச்சையும்
களத்தில் தானே
விட்டார்கள்!

Comments

Popular posts from this blog

எங்கள் வீடு!

எந்திரன் - ஓர் திருப்புமுனை!

ஆக்கப் பூர்வ தீர்வு!