Posts

Showing posts from September, 2010

ஆக்கப் பூர்வ தீர்வு!

சிந்தனைத் துளிகளில் சிந்துகிறது ரத்தத் துளிகள்! வேதனைகளின் சாரம் எண்ணக் கடலில் கலக்கிறது! தடுக்கி விழுந்தால் கூட தடுக்கி விட்டது ஈழத் தமிழனின் எலும்பாக இருக்கிறது! இரத்தமும் காயமும் அடியும் வேதனையும் எங்களின் வாழ்வில் சாதாரணமாகி விட்டது! வாழ்க்கையின் மிச்சத்தை நம்பிக்கையின் சொச்சத்தால் கடந்து விடலாம் என நம்பி கம்பி வேலிச்  சிறையில் அடைபட்டு கிடக்கின்றோம்! எங்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகிறது! எங்கள் ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாகிறது! எங்களின் கண்ணியம் சிதைக்கப்படுகிறது! எந்தத் தமிழ் பெண்ணையும் சிங்கள் சிப்பாய்கள் கற்பழிக்கலாமாம்! எந்த தடையும் இல்லை! மானுட நேயம் மறந்த மாபாதகர்களால் இன்னும் குருடாக்கப்படுவோரும் ஊனமாக்கப்படுவோரும் ஏராளம்! ஏராளமானோர் சிந்திய ரத்தம் பூமியில் புதைந்திருக்கிறது விதைகளாய்! முளைத்திடும் வேளையில் எழுச்சி மீண்டும் எழுந்திடும்! தீயில் கருக்கினும் எங்கள் சுதந்திர தாகம் அடங்கா! இந்த யுத்த பூமிக்கு நிரந்தர அமைதி கிடைக்க வேண்டுமெனில் செய்ய வேண்டுவது! இரு இனத்து நல்லோர் அறிஞர் மக்கள் கலந்தாலோசித்து போரை