பச்சை துரோகம்

நீர்த்து விட்டது கண்களில்
நீர்வரத்து!
தகர்ந்து விட்டது
நம்பிக்கை!


நாங்களும் சுதந்திர காற்றை
சுவாசிப்போம் என்ற
நம்பிக்கை தகர்ந்து விட்டது!


பச்சை துரோகம் செய்த
உலக நாடுகளை விட
பச்சை தமிழர்கள்
துரோகம் செய்து
விடவில்லை!


எங்கள் பொருட்டு
தங்கள் உயிரை
துச்சமென எண்ணி
போராட்ட உணர்வைத்
தூண்ட தங்கள்
இன்னுயரை
துறந்தார்கள்!


எந்த நோக்கத்துக்காக
தங்கள் இன்னுயிர்
ஈந்தர்களோ
அந்த எழுச்சி நிச்சயமாய்
எழுந்தது!
தமிழ் உணர்வாளர்கள்
துடித்தெழுந்தர்கள்!


அங்கேயும் கொடுமை
அரங்கேறியது!
அரசியல் சாயம்
பூச முயன்ற
கட்சிகளின்
வெளி வேசத்தால்
எழுச்சியும்
புஷ்வாணமானது!


தமிழன் என்றொரு இனமுண்டு!
அதை அழிக்க தனி இனம் தேவையில்லை
தமிழரே போதுமானது
என்று முதுகில் குத்திய
கட்சிகள் அரங்கேறிய
வேளை அது!


ஆக்க பூர்வ அரசியலால்
தீர்வு உண்டு!
ஆதாய பூர்வ அரசியலிடம்
தீர்வு எதிர் பார்ப்பது
மடமையல்லவா?

Comments

Popular posts from this blog

எங்கள் வீடு!

எந்திரன் - ஓர் திருப்புமுனை!

ஆக்கப் பூர்வ தீர்வு!