பிரியமான தோழியே!
நிதம் நிதம் உன்னோடு
பேசிக் களித்திருக்கிறேன்!
இதம் இதமான சொற்கள்
உன் இதழ்களிலிருந்து வெளிப்பட
நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்!
அதனாலேயே என் உள்நாட்டில்
உன் குரலோசையே தேசியகீதம்!
உன் இதழ்களே அரசுசின்னம்
உன் நினைவே கொண்டாடும் மதம்
உன் பணப்பையே என் கஜானா!
நீ வரும்போது தான்
எந்நாட்டில்
வசந்தகாலம்!
நீ என்னருகில்
இல்லாத் தருணங்கள்
கோடைக்காலம்!
நீ சிரிப்பதைக் கண்டால்
எந்நாட்டில்
மலர்கள் பூத்துக்
குலுங்குகின்றன!
Comments
Post a Comment