Posts

இது நாடா இல்லை சுடுகாடா!

இது நாடா இல்லை சுடுகாடா! அண்மை கால அரசியல் நிகழ்வுகளைக் காணும் பொழுது என்னடா இது நாடா இல்லை எமலோகமா என்ற சந்தேகம் என்னுள் வலுவாக தோன்றுகிறது. மக்கள் நல அரசமைப்போம் என்று கூறி அரசை அமைத்து விட்டு மக்கள் கால காலமாக பெற்று வந்த சலுகைகளை ரத்து செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்கிறார்கள். இணைத்த உடன் அனைத்தையும் ரத்து செய்கிறார்கள். ஆதார் எண் குறித்து அரசின் நோக்கம் தான் என்ன என்று தெளிவுபடுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் .  தமிழக தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் . இதுவரை காணாத அளவு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் துரோகம் இழைக்கப் படுகிறது. அதை எல்லாம் கண்டும் காணாமல் இருக்க ஒருவேளை கையூட்டு பெற்று விட்டார்களோ என்னவோ. நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களுக்கு பெரும் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு என்ன பாட திட்டத்தில் கற்பிக்கப்பட்டதோ அதை தானே அவர்கள் படித்தார்கள்.  நீட் தேர்வை அமல்படுத்தும் கொள்கை முடிவை அரசு எடுத்த போதே அதற்கேற்ற பாட திட்டத்தினை கற்பித்து மாணவர்களை தயார் செய்ய வேண்டியது அரசின் கடமை அல்லவா. அதை செய்யாமல் திடீரென அமல்படுத்தி அவ
Image
எண் ண  அலைகள்  செயல்படும் விதம் இந்த படத்தில் இருப்பதை  போல் இருக்குமோ!

நிலையாகுமோ வாழ்க்கை!

நித்தம் அமுது படைத்தது         ஊட்டினாள் அன்னை! நிலாவைப் பற்றியும் எடுத்து         இயம்பினார் தந்தை! நீலவான இரகசியத்தை         எடுத்துரைத்தார் குரு! நீலவானமும் எடுத்துரைத்துக்         கொண்டே இருக்கிறது             நித்தியப் பொருள் எது என்று! நீ தேடுவது நித்தமும்         நிலைத்த இன்பமா? நிமிடத்தில் முடிந்து          போகும் இன்பமா? நீ எங்கிருந்து வந்தாய்? நீ எங்கே போகப் போகிறாய்? நீ தேடுவது நீண்ட இன்பம்           தரும் நல்லதையா? நீ அனுபவித்தே தீர்க்க வேண்டிய            துன்பம் தரும் தீயதையா? நினது துன்பங்களுக்கும்            துயரங்களுக்கும் நீயே பொறுப்பு! நிலையில்லா இவ்வுலகில்           நீ யார் என்பதை நிச்சயிக்கும் திறமை           உன்னிடத்திலேயே இருக்கிறது! நிலைத்த பரம் பொருளை           படைத்தவனிடம் நீ செல்லும் காலம்           நினது முயற்சியிலேயே உள்ளது!  

பிரியமான தோழியே!

நிதம் நிதம் உன்னோடு         பேசிக் களித்திருக்கிறேன்! இதம் இதமான சொற்கள்         உன் இதழ்களிலிருந்து வெளிப்பட            நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்! அதனாலேயே என் உள்நாட்டில் உன் குரலோசையே தேசியகீதம்! உன் இதழ்களே அரசுசின்னம் உன் நினைவே கொண்டாடும் மதம் உன் பணப்பையே என் கஜானா!                        நீ வரும்போது தான் எந்நாட்டில் வசந்தகாலம்! நீ என்னருகில் இல்லாத் தருணங்கள் கோடைக்காலம்! நீ சிரிப்பதைக் கண்டால் எந்நாட்டில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன!

இலங்கைப் போரின் வீடியோ தொகுப்பு

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=86382573001

பிராமணியத்தின் கொடுமைகள்

http://www.tamilcircle.net/index.php?Itemid=111&catid=194:documentaryindia&id=3972:2008-09-13-10-53-11&month=10&option=com_content&view=article&year=௨௦௦௮

எந்திரன் - ஓர் திருப்புமுனை!

எனதருமை தமிழ் மக்களே! தமிழ் சினிமாவிலே ஒரு புது முயற்சியாக எந்திரன் திரைப்படம் வித்தியாசமாகவும் முதன்மை முயற்சியாகவும் எடுக்கப் பட்டுள்ளது! பெரும்பாலும் எல்லா இணைய தளங்களிலுமே எந்திரன் குறித்த விமர்சனம் வெளியாகி விட்ட போதிலும் நான் உணர்ந்த சில விசயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவதாக நான் சொல்ல விரும்புவது ரஜினியின் துவக்க காட்சி! எல்லா படங்களிலுமே பெரும் படாடோபங்களோடு அறிமுகமாகிற ரஜினி, இப்படத்திலே மிகவும் எளிமையாக அறிமுகமாகிற காட்சி தமிழ் சினிமாவிற்கு புதிது. ஆங்கிலப் படங்களில் தான் இவ்வாறு எளிமையாக, சாதரணமாக அறிமுகப்படுத்துவார்கள். தமிழ் சினிமா உலக தரத்திற்கு உயர்ந்து வருவதற்கு இது ஓர் உதாரணம். இரண்டாவதாக நான் கூறவிரும்புவது, ரோபோட் பற்றி தான். சாதாரண பொம்மையை வைத்து படமெடுத்து இருப்பார்கள் என்று தான் நினைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றேன் ஆனால் நிஜமான ரோபோவையே நடிக்க வைத்தது போல சிறப்பாக எடுக்கப் பட்டிருந்தது. தமிழ் சினிமா இன்னொரு தளத்திற்கு உயர்ந்திருப்பதற்கு இதுவே ஓர் சாட்சி. மூன்றாவதாக சொல்லவேண்டியது பாடல்களைப் பற்றி. உலக மார்க்கெட்டை மனதில் கொண்டு பா